Advertisement

தமிழ்நாட்டில் இன்று 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Sun, 21 Aug 2022 9:50:20 PM

தமிழ்நாட்டில் இன்று 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை :கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று இருந்துவருகிறது.தற்போது அதன் பாதிப்பு குறைந்தாலும் தொற்று இருந்துகொண்டுதான் உள்ளது.தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. சென்னை, தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 63 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 743 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

corona,infection ,கொரோனா,தொற்று

அதே சமயம் தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 19 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 என்ற அளவில் இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை கொரோனா பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.

Tags :
|