Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,080 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,080 பேர் சிகிச்சை

By: Monisha Fri, 06 Nov 2020 2:51:53 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,080 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34, 429ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,03,085 ஆக உள்ளது. 6,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,93,312 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,693 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோடம்பாக்கம் - 416
அண்ணா நகர் - 479
தேனாம்பேட்டை - 355
தண்டையார்பேட்டை - 253
ராயபுரம் - 285
அடையாறு- 337
திரு.வி.க. நகர்- 369
வளசரவாக்கம்- 246
அம்பத்தூர்- 320
திருவொற்றியூர்- 134
மாதவரம்- 158
ஆலந்தூர்- 210
பெருங்குடி- 210
சோழிங்கநல்லூர்- 91
மணலி - 71

Tags :
|