Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 25 Aug 2020 1:58:45 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் காரோண வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 848 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

corona virus,corona death,corona infection,india ,கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா தொற்று, இந்தியா

இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.85 சதவீதம் ஆகும். இருப்பினும் நாடு முழுவதும் இதுவரை 24,04,585 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் சராசரி 75.27 ஆக உயர்ந்தள்ளது.

கொரோனா பாதிப்புடைய 7,04,348 பேர் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 22.88 சதவீதம் ஆகும். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்கள் கொரோனா பாதித்த மாநிலங்களாக உள்ளது.

Tags :