Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,182 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,182 பேர் சிகிச்சை

By: Monisha Thu, 05 Nov 2020 2:52:33 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,182 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34, 429ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,02,495 ஆக உள்ளது. 6,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,92,631 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,682 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 444
அண்ணா நகர் - 493
தேனாம்பேட்டை - 379
தண்டையார்பேட்டை - 234
ராயபுரம் - 302
அடையாறு- 350
திரு.வி.க. நகர்- 435
வளசரவாக்கம்- 255
அம்பத்தூர்- 344
திருவொற்றியூர்- 145
மாதவரம்- 168
ஆலந்தூர்- 195
பெருங்குடி- 200
சோழிங்கநல்லூர்- 93
மணலி - 80

Tags :