Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 15 Aug 2020 1:37:33 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடைய 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona infection,india,corona virus,corona death ,கொரோனா தொற்று, இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 57 ஆயிரத்து 382 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 8 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவிகிதம் 71.61 என்ற அளவில் உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் பலியாகியுள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 679 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 63 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|