Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

By: Karunakaran Mon, 03 Aug 2020 1:04:08 PM

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அரசு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம், இவ்வாறு வரும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய திருத்தப்பட்ட விதிமுறைகளை நேற்று வெளியிட்டது. இவர்கள் 7 நாட்கள் சொந்த செலவில் நிறுவன தனிமையும், மீதி 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் அனைவரும் www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் உறுதிமொழி ஒன்றை அளிக்க வேண்டும். கர்ப்பிணி, குடும்பத்தில் இறப்பு, பயங்கர நோய், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கு மட்டுமே இந்த தனிமைப்படுத்தலில் இருந்து விதிவிலக்கு பெற முடியும்.

solitary confinement,travelers,federal government,foreign ,தனிமைப்படுத்துதல், பயணிகள், மத்திய அரசு, வெளிநாட்டு

96 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களும் நிறுவன தனிமை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. பயணிகள் அனைவரும் தங்கள் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். விமானம் அல்லது கப்பலில் பயணத்தின்போது பயணிகள் அனைவரும் முககவசம், கை கழுவுதல் போன்ற சுகாதாரமான சூழலை பேண வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், விதிவிலக்கு பெற்றிருக்கும் பயணிகளை தவிர மீதமுள்ளவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் சொந்த செலவில் தங்க வேண்டும். தொற்று இல்லாதவர்கள் 7 நாள் தனிமை முடித்து வீட்டுக்கு அனுப்பப்படுவர். அங்கு மீதமுள்ள 7 நாள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும். இது வருகிற 8-ந்தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :