Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 07 June 2023 10:08:22 AM

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது நேற்று காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது.

இதையடுத்து இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

rainfall,low pressure area,arabian sea ,மழை ,காற்றழுத்த தாழ்வு பகுதி,அரபிக்கடல்

மேலும் அத்துடன் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் வருகிற 10- ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.


Tags :