Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி

குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி

By: Karunakaran Wed, 30 Dec 2020 7:49:27 PM

குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்தன. இதனால் சிலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரோசியால் ஏற்பட்ட நிலநடுக்கம் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டது. இதே பகுதியில் நேற்று முன்தினம் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7 death,croatia,earthquake,europe ,7 மரணம், குரோஷியா, பூகம்பம், யூரோப்

இந்நிலையில், குரோசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :