Advertisement

சேலம் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Thu, 20 Oct 2022 09:37:01 AM

சேலம் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1763 ஆக உள்ளது. மேலும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,29,977 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,826 ஆக உயர்வு. மாவட்டத்தில் கொரோனாவிற்கு 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா பாதிப்பு.


சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 26,813 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது.

salem,corona,damage,people,decreases,joy,treatment ,சேலம், கொரோனா, பாதிப்பு, மக்கள், குறைகிறது, மகிழ்ச்சி, சிகிச்சை

இருப்பினும், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் நாள் தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படாததால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முகாமில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு புதிதாக தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை. மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். மாவட்டத்தில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 283 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 36,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,849 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|
|
|
|
|