Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழங்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழங்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

By: Nagaraj Mon, 27 Mar 2023 10:31:16 PM

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழங்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி: நீதிமன்றத்தில் சரண்டர்... புதுச்சேரி பாஜக பிரமுகர் செந்தில்குமாரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் ரவுடி நித்யானந்தம், சிவசங்கர், ராஜா, பிரதீப், கார்த்திக், விக்னேஷ், வெங்கடேசன் ஆகியோர் திருச்சி ஜேஎம்எம் எண் 3 கோர்ட்டில் நீதிபதி பாலாஜி முன்பு சரண் அடைந்துள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. ஆசிரியர். இவரது மகன் செந்தில்குமார் (வயது 46). பாஜக மங்கலம் தொகுதியின் பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். நேற்று இரவு மங்கலம் தொகுதி, ஏரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்ட வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த 9 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அப்போது செந்தில்குமார் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை வீசினர்.

7 people,bjp,court,murder case,prominent,puducherry , கொலை வழக்கு, 7 பேர், நீதிமன்றம், பாஜக, பிரமுக, புதுச்சேரி

செந்தில்குமார் அருகே வெடிகுண்டு விழுந்து வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீசியது. அப்போது அவர் மீது வெடிகுண்டு விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது.

வெடிகுண்டு வீசி கீழே விழுந்த அவரை கும்பல் சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரணடைந்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|