Advertisement

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பலி

By: Nagaraj Fri, 04 Sept 2020 11:02:20 PM

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டுவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியில் நாட்டுவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் காந்திமதி என்பவருக்கு சொந்தமான ஆலையில், அவரும் அவரது மகள் உள்ளிட்ட 9 பெண்கள் பணியில் இருந்தனர். வயல்வெளி பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த ஆலையில், பெரும் சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

investigation,blast,rescue operation,7 women killed ,விசாரணை, வெடி விபத்து, மீட்பு பணி, 7 பெண்கள் பலி

இந்த விபத்தில் ஆலை கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இதில் உரிமையாளர் காந்திமதி, மலர்கொடி , ராஜாத்தி , லதா, சித்ரா, ருக்குமணி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 2 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கருகிய உடல்களை பார்த்து குடும்பத்தினரும் உறவினர்களும் அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|