Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்

இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்

By: Nagaraj Tue, 12 Sept 2023 6:07:46 PM

இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.

70 people,confirmation,corona,india,infection ,இந்தியா, உறுதி, கொரோனா, தொற்று, 70 பேர்

24 மணி நேரத்தில் 52 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 246 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம் 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 27 ஆக உள்ளது.

Tags :
|
|