Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 7,254 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 7,254 பேர் சிகிச்சை

By: Monisha Sat, 31 Oct 2020 3:57:53 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 7,254 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,99,173 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 7,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,88,280 ஆக உள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,639 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 488
அண்ணா நகர் - 557
தேனாம்பேட்டை - 484
தண்டையார்பேட்டை - 264
ராயபுரம் - 369
அடையாறு- 433
திரு.வி.க. நகர்- 516
வளசரவாக்கம்- 257
அம்பத்தூர்- 359
திருவொற்றியூர்- 128
மாதவரம்- 168
ஆலந்தூர்- 193
பெருங்குடி- 235
சோழிங்கநல்லூர்- 102
மணலி - 121

Tags :
|