இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவுக்கு புதிதாக 73,272 பேர் பாதிப்பு
By: Monisha Sat, 10 Oct 2020 12:57:44 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டி உள்ளது.
மொத்த பாதிப்பு 69,79,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 926 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59,88,823 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 82,753 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,83,185 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.54 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 85.81 சதவீதமாகவும் உள்ளது.
இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 8.57 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 8,57,98,698 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,64,018 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.