ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 747 பேருக்கு கொரோனா தொற்று
By: Nagaraj Sat, 16 May 2020 11:46:39 AM
747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... கொரோனா பாதிப்பு அதிகரித்து ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று புதிதாக 747 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
மேலும் நோய் தொற்றால் 2 பேர் பலியாகினர். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 21,831 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 398 பேர் குணமடைந்தனர். மொத்தமாக நாட்டில் 7,328 பேர் குணமடைந்தனர்.
அரபு எமிரேட்சின் பல பகுதிகளில் 38000 க்கும் அதிகமானவர்களுக்கு நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்பதாகவும் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.