Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 74 வது சுதந்திர தின விழா...நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

74 வது சுதந்திர தின விழா...நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

By: Monisha Sat, 15 Aug 2020 09:27:50 AM

74 வது சுதந்திர தின விழா...நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

நாடு சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சுதந்திரதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய திருநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் இக்காலக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவீதம் அதிகமாகி உள்ளது.

independence day,edappadi palanisamy,greetings,corona virus,tamil nadu ,சுதந்திர தினம்,எடப்பாடி பழனிசாமி,வாழ்த்து,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு

மக்களின் முழு ஒத்துழைப்போடு, கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு, மீண்டும் வெற்றி நடை போடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இனிய நாளில், நமது தாய் திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி, வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :