Advertisement

புதுச்சோியில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Mon, 15 Aug 2022 2:33:50 PM

புதுச்சோியில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து அவர்களில் 77 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

இதனை தொடர்ந்து புதுவையில் மட்டும் 52 பேரும், காரைக்காலில் மட்டும் 21 பேரும், ஏனாமில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 6 பேர் மருத்துவமனைகளிலும், 476 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சைபெற்று கொண்டு வருகின்றனர்.

corona,puduchoi ,கொரோனா ,புதுச்சோி

இதையடுத்து இன்று 49 பேர் குணமடைந்தனர்.புதுவையில் தொற்று பரவல் 6.31 சதவீதமாகவும், குணமடைவது 98.58 சதவீதமாகவும் உள்ளது. மேலும் நேற்று முதல் தவணை தடுப்பூசியை 232 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 53 பேரும்.

மேலும் பூஸ்டர் தடுப்பூசியை 6 ஆயிரத்து 640 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை மட்டும் 19 லட்சத்து 51 ஆயிரத்து 44 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags :
|