Advertisement

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 8 குழநிதைகள் பலி

By: Nagaraj Sat, 08 July 2023 3:43:45 PM

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 8 குழநிதைகள் பலி

பாகிஸ்தான்: நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் பலி... பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இந்நிலையில் மணற்பாங்கான பகுதிக்கு அருகில் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க 15 சிறுவர்கள் ஆடுகளம் அமைத்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர்.

serious injuries,officers,survivors,children killed ,படுகாயம், அதிகாரிகள், உயிர் தப்பினர், குழந்தைகள் பலி

அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து உள்ளூர் மீட்புக் குழுக்கள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் 8 சிறுவர்களை சடலங்களாக மீட்டனர்.

அதில் ஒருவர் படுகாயமடைந்து உள்ளதாகவும், ஏனையோர் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :