Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் 8 கோடி குழந்தைகள் பாதிப்பு

வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் 8 கோடி குழந்தைகள் பாதிப்பு

By: Nagaraj Sun, 24 May 2020 07:59:55 AM

வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் 8 கோடி குழந்தைகள் பாதிப்பு

8 கோடி குழந்தைகள் தவிக்கின்றனர்.. கொரோனா வைரஸ் பிரச்னையால் உலகம் முழுவதும் வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் சுமார் 8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா என்ற கொடூரனிடம் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு கூட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. சில நாடுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இந்த பிரச்னை நிலவி வருகிறது.

children,health system,vulnerability,vaccination,8 crores ,குழந்தைகள், சுகாதார அமைப்பு, பாதிப்பு, தடுப்பூசி, 8 கோடி

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், காவி (Gavi) மற்றும் சபின் தடுப்பூசி நிறுவனம் இணைந்து சேகரித்த தரவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

குறைந்தது 68 நாடுகளில் வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் கணிசமாக தடைபட்டுள்ளது, மேலும் இந்த நாடுகளில் வாழும் 1 வயதுக்குட்பட்ட சுமார் 80 மில்லியன் (8 கோடி) குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 129 நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட (53 சதவீதம்) நாடுகள் கடந்த மார்ச், ஏப்., மாதங்களில் தடுப்பூசி சேவைகளை மொத்தமாக நிறுத்தி வைத்ததாக அறிவித்துள்ளன. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags :