Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 03 Dec 2022 4:15:53 PM

தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்பட  8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: கனமழை பெய்யக்கூடும் ..... தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிறகு மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ந்தேதி வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அருகில் நிலவக்கூடும்.

heavy rain,thoothukudi,ramanathapuram ,கனமழை ,தூத்துக்குடி, இராமநாதபுரம்


இதனை அடுத்து கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 03-12-2022:- தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், வடக்கு உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓஅரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :