8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் இன்று முதல் உயர்வு
By: vaithegi Sat, 01 Oct 2022 09:59:14 AM
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்வு .... இன்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
எனவே அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி போன்ற 8 ரெயில் நிலையங்களிள் நடைமேடை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
இதனை அடுத்து இந்த கட்டண உயர்வானது வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.