Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நாளில் இந்தியாவில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஒரே நாளில் இந்தியாவில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Nagaraj Wed, 03 June 2020 09:02:12 AM

ஒரே நாளில் இந்தியாவில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

1.98 லட்சமாக அதிகரிப்பு... இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது.


corona,impact,state,india,department of health ,
கொரோனா, பாதிப்பு, மாநிலம், இந்தியா, சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா - 70,013, தமிழகம் - 23,495, டில்லி - 20,834, குஜராத் - 17,200, ராஜஸ்தான் - 8,980, மத்திய பிரதேசம் - 8,283, உத்தர பிரதேசம் - 8,075, மேற்கு வங்கம்- 5,772, ஆந்திரா - 3,783, கர்நாடகா- 3,408, தெலுங்கானா - 2,792, கேரளா - 1,326, புதுச்சேரி- 74 என்று மாநிலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|