Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 10 Sept 2020 5:43:23 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,421 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

corona virus,infection,death,treatment,discharge ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,421 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 45 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags :
|