Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜிஎஸ்டி வசூல் 86 ஆயிரத்து 449 கோடி ரூபாய் - மத்திய நிதியமைச்சகம் தகவல்

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜிஎஸ்டி வசூல் 86 ஆயிரத்து 449 கோடி ரூபாய் - மத்திய நிதியமைச்சகம் தகவல்

By: Karunakaran Tue, 01 Sept 2020 7:40:38 PM

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜிஎஸ்டி வசூல் 86 ஆயிரத்து 449 கோடி ரூபாய் - மத்திய நிதியமைச்சகம் தகவல்

கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை மூலம், ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. அதன்பின், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே இருந்தது.

gst collection,august,federal ministry of finance information,86 thousand crore ,ஜிஎஸ்டி வசூல், ஆகஸ்ட், மத்திய நிதி அமைச்சக தகவல், 86 ஆயிரம் கோடி

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளது. இதனால் தற்போது, வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.

தற்போது ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஜூலை மாதத்தில் 86,449 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|