Advertisement

நாடு முழுவதும் புதிதாக 8,813 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Tue, 16 Aug 2022 10:35:20 AM

நாடு முழுவதும் புதிதாக 8,813 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 8,813 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி கடந்த 13-ந்தேதி பாதிப்பு 15,815 ஆகவும், 14-ந்தேதி 14,092 ஆகவும், நேற்று 14,917 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதை அடுத்து விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாடு முழுவதும் 1.98 லட்சம் மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

corona,daily damage ,கொரோனா ,தினசரி பாதிப்பு

இதனை தொடர்ந்து நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 77 ஆயிரத்து 194 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 15,040 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மட்டும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 38 ஆயிரத்து 844 ஆக உயர்ந்தது.

மேலும் தற்போது 1,11,252 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 6,256 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 29 பேர் இறந்துள்ளனர். எனவே மொத்த பலி எண்ணிக்கை 5,27,098 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|