Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது

By: vaithegi Thu, 25 Aug 2022 2:16:14 PM

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது

சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு 1.10.22 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

இதை அடுத்து மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் செப்டம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் தட்கல் விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

general examination,8th class ,பொதுத்தேர்வு ,8ம் வகுப்பு

முதல்முறையாக தேர்வு எழுத விண்ணப்பிக்க கூடியவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்று சான்றிதழ், நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :