Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸால் மேலும் 9 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதிப்பு

கொரோனா வைரஸால் மேலும் 9 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதிப்பு

By: Nagaraj Wed, 13 May 2020 08:34:07 AM

கொரோனா வைரஸால் மேலும் 9 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதிப்பு

மேலும் 9 வீரர்களுக்கு கொரோனா...இந்தியாவில் மேலும் 9 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

corona,vulnerability,bsf players,9 others,tripura,delhi ,கொரோனா, பாதிப்பு, பிஎஸ்எப் வீரர்கள், 9 பேர், திரிபுரா, டெல்லி

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

ஏற்கனவே சுமார் 250-க்கும் அதிகமான பி எஸ் எப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் மேலும் புதிதாக 9 பி.எஸ்.எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் திரிபுராவில் 2 பேர், டெல்லியில் 6 பேர், கொல்கத்தாவில் ஒருவர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|