Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 குற்றச்செயல்களில் ஈடுபட்ட கனேடிய பெண்ணுக்கு கனடா முழுமைக்குமான வாரண்ட் பிறப்பிப்பு

9 குற்றச்செயல்களில் ஈடுபட்ட கனேடிய பெண்ணுக்கு கனடா முழுமைக்குமான வாரண்ட் பிறப்பிப்பு

By: Nagaraj Sat, 20 Aug 2022 11:28:00 AM

9 குற்றச்செயல்களில் ஈடுபட்ட கனேடிய பெண்ணுக்கு கனடா முழுமைக்குமான வாரண்ட் பிறப்பிப்பு

கனடா: 9 குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனை பெற்ற கனேடிய பெண் ஒருவரை கனேடிய போலீசார் தேடிவருகிறார்கள்.

தன் உடலில் 16 இடங்களில் பல்வேறு உருவங்களை பச்சை குத்திக்கொண்டுள்ள அந்த பெண்ணைக் குறித்து தெரியவந்தால் தங்களுக்கு தகவலளிக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். Amanda Raynes என்ற அந்த பெண், Saint John என்ற இடத்திலுள்ள காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். தனது தண்டனைக்காலத்தின் இறுதிப்பகுதியை போலீசார் கண்காணிப்பின் கீழ் செலவிடுவதற்காக விடுவிக்கப்பட்ட அவர், நிபந்தனைகளை மீறியதைத் தொடர்ந்து அவரை பொலிசார் தேடிவருகிறார்கள். அவர் மீது கடந்த புதன்கிழமை, கனடா முழுமைக்குமான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

public,insistence,police,9 charge,officer,assault ,
பொதுமக்கள், வலியுறுத்தல், போலீசார், 9 குற்றச்சாட்டு, அதிகாரி, தாக்குதல்

கொள்ளை, ஆயுதங்களுடன் கொள்ளை, ஆயுதம் கொண்டு தாக்கியது, கள்ளநோட்டு வைத்திருந்தது, வாகன திருட்டு, தாக்கி உடலில் காயம் ஏற்படுத்தியது, அதிகாரியை ஆயுதம் கொண்டு தாக்கியது, தப்பியோடியது மற்றும் தலைமறைவானது என 9 குற்றச்செயல்களுக்காக Amandaவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

Amanda தன் உடலில், வயிறு, தோள், கை, கழுத்து, முதுகு, விரல், பாதம், தொடை, இடுப்பு, மார்பு என தனது உடலில் 16 இடங்களில் பல்வேறு உருவங்களை பச்சை குத்திக்கொண்டுள்ளார் என்று கூறியுள்ள போலீசார், Amandaவைக் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Tags :
|
|