Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 436 கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 436 கொரோனா உறுதி

By: vaithegi Sun, 28 Aug 2022 11:22:44 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 436 கொரோனா உறுதி

இந்தியா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.எனவே அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 436 கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து இது நேற்றைய பாதிப்பான 9 ஆயிரத்து 520-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை மட்டும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனைதொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 93 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 86 ஆயிரத்து 591 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 211 கோடியே 66 லட்சத்து 35 ஆயிரத்து 408 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|