Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு

By: vaithegi Sun, 13 Aug 2023 1:37:04 PM

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு

சென்னை: நாடு முழுவதும் நாளை மறுநாள் 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியேற்று உரையாற்றுகிறார்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்கான ஒத்திகையும் இன்று காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதற்கு இடையே, 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு , அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படிருக்கின்றனர்.

guards,chief minister m.k. stalin,police security ,காவலர்கள் ,முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , போலீசார் பாதுகாப்பு

இதையடுத்து பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலயங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, காவலர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீஸார் உள்பட தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :
|