Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,520 பேர் கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,520 பேர் கொரோனா உறுதி

By: vaithegi Sat, 27 Aug 2022 11:44:17 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,520 பேர் கொரோனா உறுதி

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மட்டும் தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் பற்றி அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கடந்த 3 நாட்களாகவே கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

எனவே இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 43 ஆயிரத்து 98 ஆயிரத்து 696 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 12,875 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 788 ஆகவும் உயர்ந்ததுள்ளது.

மேலும் தற்போது 87,311 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். இது நேற்றை விட 3.396 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 41 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,597 ஆக உயர்ந்ததுள்ளது.

Tags :
|