Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,531 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,531 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Mon, 22 Aug 2022 09:58:46 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,531 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனவே இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,48,960 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அதேபோன்று தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,368 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,726 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

corona,india,affected ,கொரோனா ,இந்தியா,பாதிப்பு

இதை அடுத்து இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,23,944 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 97,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,10,02,40,361 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,33,466 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,29,546 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மட்டும் மொத்தம் 88,27,25,509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|