Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 97 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் - லண்டன் நிறுவனம் எச்சரிக்கை

97 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் - லண்டன் நிறுவனம் எச்சரிக்கை

By: Karunakaran Tue, 14 July 2020 1:58:27 PM

97 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் - லண்டன் நிறுவனம் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு ‘சேவ் தி சில்ட்ரன்‘ என்ற தொண்டு நிறுவனம் கொரோனா காரணமாக கல்வியில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் 160 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்கு அரசுகள் பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை குறையும் என இந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

london institute,coronavirus,school,students ,லண்டன் நிறுவனம், கொரோனா வைரஸ், பள்ளி, மாணவர்கள்

ஊரடங்கு முடிந்த பிறகு குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப செல்லாமல் இருக்கும் ஆபத்து, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் அதிகமாக இருக்கும் எனவும், மேலும், 28 நாடுகளில் இந்த ஆபத்து அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 97 லட்சம் குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலை ஏற்படும். பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிகரிக்கும். குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பங்கள் ஆகியவையும் உயரும். அடுத்த 18 மாதங்களில், ஏழை நாடுகளில் கல்விக்கு செலவழிக்கும் தொகை 7 ஆயிரத்து 700 கோடி டாலர் குறையும் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|