சென்னையில் கொரோனாவுக்கு 9,833 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்
By: Monisha Thu, 17 Sept 2020 1:51:39 PM
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,51,560 ஆக உள்ள நிலையில் தற்போது மருத்துவமனைகளில் 9,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,140 பேர்
அண்ணா நகர் - 993
தேனாம்பேட்டை - 785
தண்டையார்பேட்டை - 622
ராயபுரம் - 828
அடையாறு - 799
திரு.வி.க. நகர் - 863
வளசரவாக்கம் - 739
அம்பத்தூர் - 768
திருவொற்றியூர் - 243
மாதவரம் - 353
ஆலந்தூர் - 641
பெருங்குடி - 475
சோழிங்கநல்லூர் - 343
மணலியில் 116