புது ரேஷன் கார்டு குறித்த தகவல் ஒன்று வெளியீடு
By: vaithegi Sun, 19 Nov 2023 1:48:17 PM
சென்னை: தமிழகத்தில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் கூட்டு குடும்பத்திலிருந்து தனி வீடு சென்றவர்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது வழக்கமான ஒன்று. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இணைவதற்கு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.
இதனால் தமிழக உணவு வழங்கல் துறை ஆனது புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை தொடர வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதனால் கடந்த 5 மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் அனைத்து விதமான பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கி வரும் ரேஷன் கார்டை அரசு வழங்குவதற்காக பொதுமக்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து இது குறித்து அரசு தரப்பு அதிகாரிகள் புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும், அரசு அனுமதி அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.