Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட 105 வயது முதியவர்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட 105 வயது முதியவர்

By: Karunakaran Sun, 05 July 2020 5:17:46 PM

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட 105 வயது முதியவர்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த கொரோனா வைரஸ் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை எளிதில் தாக்குகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகில் உள்ள பல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரபட்சமின்றி கொரோனா அனைவரையும் தாக்கி வருகிறது.

coronavirus,pakistan,corona infection,105yearold man ,கொரோனா வைரஸ், பாகிஸ்தான், கொரோனா தொற்று, 105 வயது முதியவர்

இந்நிலையில், பாகிஸ்தானில் சதம் கடந்து தற்போது 105 வயதாகியுள்ள பசல் ரவுப் என்பவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இவர் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நாளில் இருந்து ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். இது அங்கு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Tags :