Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு இன்று தொடக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு இன்று தொடக்கம்

By: vaithegi Tue, 03 Oct 2023 09:56:34 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு இன்று தொடக்கம்

சென்னை: உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு இன்று தொடக்கம் .. தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு போன்றவை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்புகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்.

conference,chief minister m.k.stalin,high officials ,மாநாடு ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,உயர் அதிகாரிகள்


இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இம்மாநாட்டில் நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை ,அமைச்சர்களினால் மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் அத்துடன் கடந்த 2 ஆண்டுகளில் துறை ரீதியாக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :