Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடைந்த நாற்காலி... பல கிலோ மீட்டர் நடந்து முதியோர் பென்ஷனுக்காக ஏமாந்த மூதாட்டி

உடைந்த நாற்காலி... பல கிலோ மீட்டர் நடந்து முதியோர் பென்ஷனுக்காக ஏமாந்த மூதாட்டி

By: Nagaraj Fri, 21 Apr 2023 9:57:47 PM

உடைந்த நாற்காலி... பல கிலோ மீட்டர் நடந்து முதியோர் பென்ஷனுக்காக ஏமாந்த மூதாட்டி

ஒடிசா: முதியோர் ஓய்வூதியத்திற்காக மூதாட்டி படும் பாடு... ஒடிசாவில் மூதாட்டி ஒருவர், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற வங்கிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு, உடைந்த நாற்காலியை ஊன்றி, வெறும் காலில் சென்றது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அப்படி சென்றும் ஓய்வூதிய தொகை கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார்.

நப்ராங்பூர் மாவட்டத்தின் ஜரிகோன் கிராமத்தில் வசித்து வரும் 70 வயதான சூர்யா ஹரிஜன் என்ற மூதாட்டி தனது இளைய மகனின்குடும்பத்துடன் வசித்து வருகிறார்,

issue,old woman,broken chair,old age pension ,பிரச்சினை, மூதாட்டி, உடைந்த நாற்காலி, முதியோர் பென்ஷன்

இவர் முதியோர் ஓய்வூதியம் பெற பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் சிரமத்துடன் சென்றார். ஆனால் மூதாட்டியின் கையொப்பம் வங்கி பதிவின்படி இல்லாததால் பணம் தராமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள வங்கி அதிகாரி, மூதாட்டியின் விரல் பாதிக்கப்பட்டுள்ளதால் பணம் பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும் விரைவில் இப்பிரச்சினை சரி செய்யப்படும் எனவும் கூறினார்.

Tags :
|