ரூ.35 கோடிக்கு வாங்கப்பட்ட எருமை மாடு... அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது
By: Nagaraj Fri, 28 Oct 2022 09:20:45 AM
ஹைதராபாத்: சதர் விழாவிற்காக ரூ.35 கோடிக்கு எருமை மாடு ஒன்று வாங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் யாதவ சமூகத்தினரால் சதர் விழா நடத்தப்படுகிறது. இதில், உரிமையாளர்கள் விலை உயர்ந்த எருமை மாடுகளை கொண்டு வருகின்றனர்.
இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஹைதராபாத்தை சேர்ந்த
மது யாதவ் தலைமையில் முனிசிபல் மைதானத்தில் உழவர் கண்காட்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. மது யாதவ் ஆண்டுதோறும் நடைபெறும் சதர் திருவிழாவில்
பங்கேற்பதற்காக எருமைகளை வாங்கி தனது பால் பண்ணையில் வளர்த்து வருகிறார்.
இதில்
மது யாதவின் ‘கருடா’ எருமை சிறப்பு கவனம் பெற்றது. இந்த 4 வயது கருடா
எருமையை யாதவ் 20 நாட்களுக்கு முன்பு ஹைமத் ஆலம் கானிடம் இருந்து ரூ.35
கோடிக்கு வாங்கினார். தற்போது அதை ஹைதராபாத் கொண்டு வந்துள்ளார். இதேபோல்,
10 எருமை மாடுகளை வைத்துள்ளார்.