Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் தலையீட்டை தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய அழைப்பு

சீனாவின் தலையீட்டை தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய அழைப்பு

By: Nagaraj Wed, 31 Aug 2022 11:51:02 AM

சீனாவின் தலையீட்டை தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய அழைப்பு

கொழும்பு: அதிபர் ரணில் அழைப்பு... சீனாவின் தலையீட்டை தடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றியணைய வேண்டும் என்று இலங்கை அதிபர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் சீனாவின் 'யுவான் வாங் 5' உளவு கப்பல் இலங்கை அம்பந்தொட்ட துறைமுகத்துக்கு வந்து சுமார் ஒரு வாரம் இருந்து கண்காணிப்பு பணியை செய்தது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என இந்தியா தெரிவித்தது.

முதலில் சீனா உளவு கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை, பின்னர் அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அனுமதி அளித்தது. இவ்வாறு இலங்கை உள்விவகாரங்களில் சீனா அதிக தலையிடுவதை தடுக்க அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தில் இணையுமாறு அதிபர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

government,neighboring countries,should unite,president,ranil ,அரசாங்கம், பக்கத்து நாடுகள், ஒன்றிணைய வேண்டும், அதிபர், ரணில்

இதுகுறித்து அவர் கூறுகையில், 'நாம் இனி கடன் உதவியை நம்பியிருக்கும் தேசமாக இருக்க முடியாது. வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட பிற நாடுகளின் தலையீட்டின் கருவியாக தங்களை இனி பயன்படுத்த கூடாது. ஒற்றுமையாகச் செயல்பட்டால்தான் இதையெல்லாம் சாதிக்க முடியும். இந்த முன்னோடியில்லாத சூழ்நிலை நம் அனைவரின் பொறுப்பாகும்.

எனவே நாட்டின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கும், பக்கத்து நாடுகள் தலையிடுவதை தடுக்கவும் அரசாங்கத்துடன் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைய வேண்டும்' என்று கூறி உள்ளார்.

Tags :