Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி மாயம்

நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி மாயம்

By: Karunakaran Fri, 04 Sept 2020 1:49:36 PM

நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி மாயம்

நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற சரக்கு கப்பல், 43 சிப்பந்திகளுடனும், சுமார் 6 ஆயிரம் கால்நடைகளுடனும் சீனாவில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் நோக்கி கடந்த 14-ந்தேதி புறப்பட்டு சென்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேசாக் புயலுக்கு மத்தியில் கிழக்கு சீன கடலில் சென்று கொண்டிருந்தது.

ஜப்பானில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி-ஓஷிமா தீவுக்கு மேற்கே 185 கி.மீ. தொலைவில் கப்பல் வந்தபோது, புயலில் சிக்கி மாயமானது. இந்த புயலில் சிக்கும் முன் கப்பலில் இருந்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு துயர அழைப்பு சென்றுள்ளது. தற்போது, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான ‘பி-3சி’ என்ற கண்காணிப்பு விமானம், உயிர் காப்பு உடை அணிந்து, ஒருவர் கடலில் குதித்து அலைந்து கொண்டிருந்ததை கண்டது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் நல்ல உடல்நலத்துடன் மீட்கப்பட்டாலும், தான் வந்த கப்பல் கவிழ்ந்து மூழ்கி விட்டதாக கூறி உள்ளார்.

cargo ship,china,napier,storm ,சரக்குக் கப்பல், சீனா, நேப்பியர், புயல்

அந்த கப்பலில் சிப்பந்திகளாக வந்த 43 பேரில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர், 2 பேர் நியூசிலாந்து நாட்டினர், 2 பேர் ஆஸ்திரேலிய நாட்டினர் ஆவர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சிப்பந்தி மீட்கப்பட்டு விட்ட நிலையில், மற்ற 42 சிப்பந்திகளின் கதி, கால்நடைகள் என்ன ஆயின என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. கப்பலை தேடும் பணியில் ரோந்து படகுகளை ஜப்பான் கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபடுத்தி உள்ளது.

ஜப்பானில் ஒசாகாவில் உள்ள துணைத்தூதரகம் நிலைமையை கண்காணித்து, அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. பலத்த சூறாவளியும், இடைவிடாத மழையும் காணாமல் போன கப்பலை தேடும் முயற்சியில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேசாக் புயலால், தென் கொரிய நகரமான புசான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|