Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன்

தனியார் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன்

By: Nagaraj Mon, 26 June 2023 11:41:34 AM

தனியார் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன்

கள்ளக்குறிச்சி: தனியார் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருக்கோவிலூரில் உள்ள ட்ரென்ட்ஸ் என்ற துணிக்கடைக்கு வந்த இரு பெண்கள் தாங்கள் வாங்கிய ஆடைகளை உடைமாற்றும் அறைக்குச் சென்று அளவு பார்த்துள்ளனர்

cell phone,hidden,woman,confiscated,police ,செல்போன், மறைத்து வைக்கப்பட்டது, பெண், பறிமுதல், போலீசார்

அப்போது ஏசி துளையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்ட அருகில் இருந்த பெண் ஒருவர் வேகமாகச் சென்று செல்போனை எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த துணிக்கடை ஊழியர்கள் அவரைப் பிடித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|