அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் வரப்பட உள்ளது
By: Nagaraj Wed, 05 July 2023 3:45:12 PM
திருநெல்வேலி: பொது சிவில் சட்டம் வேண்டும்... ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் அவர்களுக்கு தனித்தனியாக சட்டம் இருக்க முடியாது என்பதால் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் அரிகேசவநல்லூரில் பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், சரத் பவார் போன்றவர்கள் கூட பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் அவர்களுக்கு தனித்தனியாக சட்டம் இருக்க முடியாது என்பதால் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவதாக தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அரிகேசவநல்லூர் அரியநாதர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவிலும் ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.