தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
By: Nagaraj Sun, 16 Aug 2020 10:25:42 AM
தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்றித்திரிய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் படிப்படியாக தொற்று குறைந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களல் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் இம்மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமலுக்கு
வந்துள்ளது. பால், மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு
மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், காய்கறி, மளிகை
மற்றும் இறைச்சிக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை
செயல்படாது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா
பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று
மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.