Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த கட்டிடத் தொழிலாளி

தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த கட்டிடத் தொழிலாளி

By: Nagaraj Thu, 02 Feb 2023 2:38:04 PM

தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த கட்டிடத் தொழிலாளி

ராசிபுரம்: தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்தி அந்த விழாவில் கலந்து கொள்ள உறவினர்களை அழைத்து கொண்டாடியுள்ளார் கட்டிடத் தொழிலாளி.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). கட்டிட தொழிலாளி இவரது மனைவி தேன்மொழி (28). இவர்கள் கடந்த சில நாட்களாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

தற்போது ரமேஷின் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் என 2 நாய்களை வளர்த்து வருகின்றனர். பைரவி என்ற பெண் நாய் கர்ப்பமானது. இதை அறிந்த ரமேஷின் குடும்பத்தினர் பைரவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி பைரவிக்கு நடக்கும் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ள உறவினர்களை அழைத்திருந்தார்.

baby-shower,dog,rasipuram , நாய், ராசிபுரம், வளைகாப்பு, கட்டிடத் தொழிலாளர்

அருகில் உள்ள உறவினர்களும் வந்து வளைகாப்பில் கலந்து கொண்டனர். பைரவிக்கு வளையல், பூ, சந்தனம், குங்குமம் போன்றவற்றை அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது.மேலும், தக்காளி, எலுமிச்சை, புளி, அப்பளம் உள்ளிட்ட 3 கலவை சாதம் மற்றும் இனிப்பு வகைகள் தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர். ரமேஷ் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் நாய்க்கும் வளைகாப்பு நடத்தியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags :
|