நார்வேயை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து கரம் பிடித்த கடலூர் வாலிபர்
By: Nagaraj Fri, 30 June 2023 11:10:14 PM
கடலூர்: நார்வேயை சேர்ந்த இளம்பெண்ணை கடலூரை சேர்ந்த வாலிபர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் பாலமுருகன். பிஎச்.டி. பட்டதாரியான இவர் நார்வேயில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இதே பல்கலைக்கழகத்தில் நார்வே நாட்டின் போர்கன் நகரைச் சேர்ந்த சிவாநந்தினி என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார்.
சிவாநந்தினியின் குடும்பம் இலங்கைத் தமிழர். 40 ஆண்டுகளுக்கு முன் நார்வேக்கு வந்து குடியேறினர். அதன்பிறகு சிவாநந்தினியும் அந்த பிரபல பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்ததால் இருவருக்கும் இடையே காதல் தொடங்கியது.
காதல் திருமணம் செய்ய, குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து, இரு வீட்டாரும் பேசி, உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது.
தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் நார்வேயில் இருந்து வந்த மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு தமிழ் முறைப்படி இந்து கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். நார்வேயில் பிறந்து வளர்ந்தாலும், தமிழ் கலாசாரம் பிடித்ததால் தான் தமிழை கற்றுக் கொண்டதாகவும், தமிழனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும், தற்போது தனது கனவு நினைவிற்கு வந்துள்ளதாகவும் மணமகள் தெரிவித்துள்ளனர்.
மருமகன் பாலமுருகன், நார்வே சென்ற போது காதலித்ததாகவும், ஆனால், குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால், குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் முடிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து நார்வேக்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழ்க் குடும்பம் கடலூருக்கு வந்து கடலூருக்கு தமிழ் வழியில் திருமணம் செய்து கொண்டது.