Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்

ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்

By: vaithegi Sat, 03 June 2023 09:58:07 AM

ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மீட்பு பணிகளில் உடன் இருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜயந்த், இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுப்பி வைத்து உள்ளார்.

mourning day,odisha ,துக்க நாள்,ஒடிசா

இதையடுத்து இந்த நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்" என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மவுன அஞ்சலி.மேலும் இன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த சோகமான சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தி, இறந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்துமாறு கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags :