Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - அனில் தேஷ்முக்

மகாராஷ்டிரா நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - அனில் தேஷ்முக்

By: Karunakaran Mon, 24 Aug 2020 2:04:33 PM

மகாராஷ்டிரா நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - அனில் தேஷ்முக்

நாடு முழுவதும் தற்போது கொரானா ஊரடங்கின் 3-ம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளது. இந்த தளர்வில், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றங்களுக்கு கட்டுப்பாடுகள் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து நீடிக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கூடாது என 3-ம் கட்ட தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது முன் அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் நடைமுறை போன்றவை தேவை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

curfew,maharashtra,anil deshmukh,corona virus ,ஊரடங்கு உத்தரவு, மகாராஷ்டிரா, அனில் தேஷ்முக், கொரோனா வைரஸ்

இந்நிலையில் மத்திய அரசின் அறிவுரையை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநிலத்தின் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு இடையே பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்றுமாறு மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கி உள்ளதை கவனித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தற்போது மகாராஷ்டிராவில் இ-பாஸ் கட்டாயம்.இதுவரை 7 லட்சத்து 74 ஆயிரத்து 203 இ-பாஸ் வினியோகிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|