Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவிலில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதியை அறைந்த பக்தர்

கோவிலில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதியை அறைந்த பக்தர்

By: Nagaraj Thu, 10 Aug 2023 06:58:18 AM

கோவிலில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதியை அறைந்த பக்தர்

மகாராஷ்ட்ரா: தீவிரவாதியை அறைந்த பக்தர்... மகாராஷ்ட்ரா மாநிலம் தூலேயில் உள்ள சுவாமிநாராயணன் கோவிலில் திடீரென துப்பாக்கியுடன் தோன்றிய தீவிரவாதியின் முகத்தில் பக்தர் அறைவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்ட்ரா மாநிலம் தூலேயில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் திடீரென ஒரு தீவிரவாதி துப்பாக்கியுடன் தோன்றியதால் மக்கள் பீதியடைந்தனர்.

policeman,devotees,children,terrorist,rehearsal ,போலீஸ்காரர், பக்தர்கள், குழந்தைகள், தீவிரவாதி, ஒத்திகை

அப்போது அங்கிருந்த பக்தர் ஒருவர் தீவிரவாதியின் முகத்தில் அறைவிட்டார். அதற்குள் அந்த இடத்திற்கு வந்த போலீசார், இது வெறும் ஒத்திகைதான் என்றும், தீவிரவாதியாக வந்தவர் போலீஸ்காரர் என்று கூறினர்.

என்னதான் ஒத்திகை என்றாலும் தங்கள் குழந்தைகள் மிரண்டு போகும் வகையில் நடந்து கொள்வதா என பக்தர்கள் ஆவேசமடைந்தனர். போலீஸ்காரருக்கு அறை கொடுத்த 35 வயதான பிரசாந்த் குல்கர்னி என்ற நபருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.

Tags :