Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கத்தாரில் கொரோனா தொற்றால் மேலும் 1993 பேர் பாதித்ததாக அறிவிப்பு

கத்தாரில் கொரோனா தொற்றால் மேலும் 1993 பேர் பாதித்ததாக அறிவிப்பு

By: Nagaraj Fri, 29 May 2020 10:46:49 PM

கத்தாரில் கொரோனா தொற்றால் மேலும் 1993 பேர் பாதித்ததாக அறிவிப்பு

தோஹா கத்தாரில் மேலும் 1,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் பலியாகினர். இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்தாரிலும் நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில் ) புதிதாக 1,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,907 ஆக அதிகரித்துள்ளது.


examination,qatar,intensive care,216 people,corona infection ,
பரிசோதனை, கத்தார், தீவிர சிகிச்சை, 216 பேர், கொரோனா தொற்று

புதிதாக 3 பேர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்புக்கு 32,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5,205 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,000 ஆக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சையில் 216 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கத்தாரில் 5,864 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. நாட்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 212,897 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags :
|